Sunday, May 25, 2008

வா இங்கே !!!

காலைக் கதிரவனே !
கடலில் உதிக்கின்றாய்
மலையில் மறைகின்றாய்
மண்ணில் சிரிக்கின்றாய் !

மலர்கள் மலர்கின்றன
தளிர்கள் துளிர்க்கின்றன
மரங்கள் செழிக்கின்றன
உன்வரவால் உலகேஒளிரும் !

இளங்காலைப் பொழுதில்
இன்பம் தருகின்றாய்
இருளை மறைக்கின்றாய்
இளங்கதிரே ! வா இங்கே !
வையத்தில் வளங்காண !